×

டெல்லியில் தேஜ கூட்டத்திற்கு அழைக்காமல் பாஜக மேலிடம் நிராகரித்ததால் சந்திரபாபு கடும் `அதிருப்தி’: இந்தியா கூட்டணியில் சேர ஆலோசனை

திருமலை: டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனைக்கூட்டத்தில் ஆந்திராவில் இருந்து ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன்கல்யானுக்கு மட்டுமே பாஜ மேலிடம் அழைப்பு விடுத்திருந்தது. தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபுவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தல் வரும் நிலையில் சந்திரபாபு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

பா.ஜ முடிவால் ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் தனித்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து சந்திரபாபு, தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசிக்க தொடங்கியுள்ளார். பாஜ தங்களை தவிர்த்திருப்பதால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் `இந்தியா’ கூட்டணியில் இணையலாமா? எனவும் அவர் ஆலோசிக்க தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post டெல்லியில் தேஜ கூட்டத்திற்கு அழைக்காமல் பாஜக மேலிடம் நிராகரித்ததால் சந்திரபாபு கடும் `அதிருப்தி’: இந்தியா கூட்டணியில் சேர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chandrababu ,BJP ,Teja ,Delhi ,India ,Tirumala ,National Democratic Alliance Party ,Janasena Party ,Andhra Pradesh ,
× RELATED புலிவேந்துலா தொகுதியில் தோற்பார்...